×

வேளாங்கண்ணி பகுதியில் அறுவடை தீவிரம் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்க பச்சை மிளகாய்கள் தயார்நிலை

நாகை : வேளாங்கண்ணி அருகே அறுவடை செய்யும் பச்சைமிளகாய் வெளி மாவட்டங்களுக்கு அனுப்ப தயார்நிலையில் உள்ளது.வேளாங்கண்ணி அருகே பரவை, தெற்கு பொய்கைநல்லூர், வடக்கு பொய்கைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பச்சைமிளகாய் சாகுபடி செய்துள்ளனர். இந்த பச்சைமிளகாய் தற்பொழுது அறுவடை செய்யப்படுகிறது. இங்கு பச்சைமிளகாய் இயற்கை முறையில் சாகுபடி செய்வதால் மற்ற பகுதிகளில் விளையும் பச்சைமிளகாயை விட காரத்தன்மை அதிகமாக இருக்கும்.இதனால் வேளாங்கண்ணி பகுதியை சுற்றி விளையும் பச்சை மிளகாய்கள் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கரூர் ஆகிய பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்த ஆண்டு இந்த பகுதியில் பச்சைமிளகாய் நல்ல விளைச்சல் அடைந்துள்ளது. எனவே வழக்கம் போல் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து பச்சைமிளகாய் வாங்க வியாபாரிகள் வந்துள்ளனர். தற்பொழுது அறுவடை செய்யப்படுவதால் நல்ல விலையும் கிடைக்கிறது என விவசாயிகள் தெரிவித்தனர்….

The post வேளாங்கண்ணி பகுதியில் அறுவடை தீவிரம் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்க பச்சை மிளகாய்கள் தயார்நிலை appeared first on Dinakaran.

Tags : Velankanni ,Nagai ,Paravai ,Velankanni, South ,
× RELATED சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு 17ம்தேதி முதல் கோடைகால சிறப்பு ரயில்